கீழ்பென்னாத்தூர் அருகே ஆம்புலன்சில் இளம்பெண்ணுக்கு குவா, குவா

திருவண்ணாமலை :  கீழ்பென்னாத்தூர் அருகே இளம்பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே அழகிய பெண் குழந்தை பிறந்தது. கீழ்பென்னாத்தூரை சேர்ந்தவர் கதிரவன், லாரி டிரைவர். இவரது மனைவி ஆதிலட்சுமி(25). இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், ஆதிலட்சுமி  நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் மாலை அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால், அவரது உறவினர்கள் கீழ்பென்னாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 பின்னர், மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சில் மருத்துவ டெக்னீஷியராக குமரன் என்பவர் பணியில் இருந்தார். கீழ்பென்னாத்தூரில் இருந்து சிறிது தூரம் சென்றதும், ஆதிலட்சுமிக்கு பிரசவவலி மேலும் அதிகரித்து, ஆம்புலன்சிலேயே அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, தாயும், குழந்தையையும் ஆம்புலன்சில் அழைத்து வந்து திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், டாக்டர்கள் உரிய மருத்துவ சிகிச்சை அளித்ததையடுத்து, தாயும், குழந்தையும் நலமுடன் உள்ளனர்.

Related Stories: