மதுரை: மதுரை மேலவளவில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேர் விடுதலை செய்யப்பட்டது எப்படி? என ஐகோர்ட் மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 13 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் விதித்த தண்டனை காலத்தை தமிழக அரசு எளிதாக கையாண்டு குற்றவாளிகளை விடுவித்தது கண்டனத்துக்கு உரியது எனவும் தெரிவித்துள்ளது.