டெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு தொடர்ந்து உள்ள வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ப.சிதம்பரம் ஜாமீன் மனுவை அவசரமாக விசாரிக்க தலைமை நீதிபதி போப்டே முன் முறையிட வழக்கறிஞர் கபில் சிபல் திட்டமிட்டு உள்ளார்.