புதுடெல்லி: மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு கடந்த ஆண்ைட விட பாதியாக குறைந்துள்ளது. மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால், நடப்பு ஆண்டில் கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதங்களில் பங்குச்சந்தையுடன் இணைந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் 55,700 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் முதலீடு 1.12 லட்சம் கோடியாக இருந்தது. என பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வரியம் (செபி) தெரிவித்துள்ளது.