தொழிலதிபர் வீட்டில் 4 லட்சம் பிளாட்டினம் மாயம்: திருநங்கையிடம் போலீசார் விசாரணை

சென்னை: தொழிலதிபர் வீட்டில் 4 லட்சம் மதிப்புள்ள பிளாட்டினம் நகை மாயமானது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து  வருகின்றனர். விருகம்பாக்கம் நடேசன் நகர் தாய் குடியிருப்பை சேர்ந்தவர் சுந்தர் (33). தொழிலதிபரான இவர், ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த 10ம் தேதி இவர், வீட்டை பூட்டிவிட்டு ஆந்திர மாநிலம் சித்தூருக்கு தனது குடும்பத்துடன் சென்றார். அங்கிருந்து, நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.

அப்போது, பீரோவில் வைத்திருந்த 4 லட்சம் மதிப்புள்ள பிளாட்டினம் நகை மற்றும் 27 ஆயிரம், விலை உயர்ந்த வெளிநாட்டு மது பானங்கள் மாயமானது தெரிந்தது. வீட்டில் எந்த பூட்டும் உடைக்கப்படாமல் நகை மற்றும் பணம் மட்டும் மாயமாகி இருந்தது. வீட்டில் வேலை செய்து வரும்

திருநங்கை செந்தில்குமாரிடம் வீட்டின் மற்றொரு சாவி இருப்பதால், அவர் மீது சந்தேகம் உள்ளதாக சுந்தர், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து திருநங்கை செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: