அண்ணாநகர், மதுரவாயல், கோயம்பேடு பகுதிகளில் பெண்களை நோட்டமிடும் ஆசாமிக்கு வலை: சிசிடிவி பதிவுகள் மூலம் விசாரணை

அண்ணாநகர்: அண்ணாநகர், மதுரவாயல், கோயம்பேடு பகுதிகளில் அதிகாலையில் சாலையில் நடந்து செல்லும் பெண்களை மர்ம நபர் நோட்டமிடுவதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெற்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணாநகர், மதுரவாயல், கோயம்பேடு போன்ற பகுதிகளில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர், தினமும் அதிகாலையில் சாலையில் நடந்து செல்லும் பெண்களை நோட்டம் விடுவதாக அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, வாலிபர் ஒருவர், பெண்களை நோட்டம் விடுவது பதிவாகியிருந்தது.

அந்த வாலிபர் யார்? வட மாநிலத்தை சேர்ந்த வழிப்பறி கும்பலை சேர்ந்தவரா? அல்லது கடத்தல் கும்பலை சேர்ந்தவரா? என போலீசார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பெண்களை நோட்டமிடும் வாலிபர் படத்தை வெளியிட்ட போலீசார், சம்மந்தப்பட்ட வாலிபரை கண்டால் உடனடியாக அவசர உதவி எண் 100ஐ தொடர்புகொண்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க போலீசார் கேட்டுக்கொண்டனர்.

Related Stories: