கொடைக்கானல்: கொடைக்கானலில் குளிர் சீசனை அனுபவிக்கவும், வார விடுமுறையை கொண்டாடவும் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர். ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானலில் ‘ஆப் சீசன்’ முடிந்த நிலையில், நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிலவும் குளிர் சீசன் துவங்கியுள்ளது. இந்த சீசனில் கொடைக்கானலில் நிலவும் தட்பவெப்ப நிலை குறைந்து குளிராகவே இருக்கும். இதனை அனுபவிக்கும் விதமாக சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். சனி, ஞாயாறு வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.