கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஒருதலைக் காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை கத்தியால் தாக்கிய இளைஞனை போலீசார் கைது செய்தனர். வடமூரைச் சேர்ந்த 18 வயதான அந்தப் பெண், சிதம்பரத்திலுள்ள ஹாட் சிப்ஸ் உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவரோடு அதே கடையில் வேலை பார்த்து வந்த விழுப்புரம் மாவட்டம் களமருதூரைச் சேர்ந்த சக்திவேல் அப்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.