கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காதல் விவகாரத்தில் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: இளைஞர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஒருதலைக் காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை கத்தியால் தாக்கிய இளைஞனை போலீசார் கைது செய்தனர். வடமூரைச் சேர்ந்த 18 வயதான அந்தப் பெண், சிதம்பரத்திலுள்ள ஹாட் சிப்ஸ் உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவரோடு அதே கடையில் வேலை பார்த்து வந்த விழுப்புரம் மாவட்டம் களமருதூரைச் சேர்ந்த சக்திவேல் அப்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

காலை திடீரென இளம் பெண்ணின் வீட்டுக்கு வந்த சக்திவேல், தன்னைக் காதலிக்க வேண்டும் என வற்புறுத்தியதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அந்தப் பெண்ணின் கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சக்திவேலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: