சென்னை: ஆழ்துளை கிணறுகளை சரியாக மூடப்படவில்லை என்று பொய் வழக்கு தாக்கல் செய்த பெண்ணுக்கு அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை செம்பியம் சுந்தர விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த ஜெய என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘செம்பியம் பகுதியில் பொது பாதையில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. அதில் தண்ணீர் வராததால், பயன்படுத்தப்படாமல் அப்படியே உள்ளன. அதேநேரம் அந்த ஆழ்துளை கிணறுகளை முறையாக மூடவில்லை. பிளைவுட் மற்றும் கான்கிரீட் போட்டு மேலோட்டமாக மூடப்பட்டுள்ளது. எனவே, மணப்பாறை சுஜித் மரணம் போன்ற துயர சம்பவம் சென்னையிலும் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.