சென்னை: பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி வருகிற 21ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விசிக செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ., பச்சை தமிழகம் கட்சி தலைவர் சுப.உதயகுமார், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், எஸ்.டி.பி.ஐ. தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி, எஸ்.டி.பி.ஐ.மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், மமக பொதுச்செயலாளர் அப்துல் சமது, பாப்புலர் ப்ரண்ட் மாநில தலைவர் முகமது இஸ்மாயில், தமிழ் பேரரசு கட்சி தலைவர் இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.