சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த ஆண்டனி கிளமென்ட் ரூபன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 37 வளர்ப்பு யானைகள் உள்ளன என்று தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது. இந்த யானைகள் பராமரிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய கடந்த 2016ம் ஆண்டு குழு அமைக்கப்பட்டது. ஆனால், இந்த யானைகள் உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை என்று தெரியவருகிறது. எனவே வளர்ப்பு யானைகளின் தற்போதைய நிலையைக் கண்டறிய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர்கள் குழுவை அமைக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.