சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் 150 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரமாக வீடு பூட்டி இருந்ததை நோட்டமிட்டு திருடர்கள் கைவரிசை காட்டியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து காரைக்குடி டி.எஸ்.பி. அருண் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.