புழல்: சோழவரம் அருகே வாகன சோதனையின் போது, 10 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் 2 வேன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலை அழிஞ்சிவாக்கம் பகுதியில் சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் நேற்று மதியம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 2 மினி வேன்கள் கும்மிடிப்பூண்டியில் இருந்து சோழவரம் நோக்கி வேகமாக வந்தது. வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த 2 வேன்களையும் தடுத்து நிறுத்தியபோது, வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்து 3 பேர் தப்பி ஓடினர்.