×

பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணிடம் 1.5 லட்சம் வைர நகை அபேஸ்

சென்னை: மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் சியாமளா (31). திருமணமானவர். தற்போது, விவகரத்து பெற்று, மயிலாப்பூர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிசியோதெரப்பியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சியாமளாவிற்கு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மீஞ்சூரை சேர்ந்த ஜெயச்சந்திரன் (40) என்பவருடன் பேஸ்புக் மூலம் கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலமாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

பின்னர், நேரில் சந்தித்தும் தங்களுடைய காதலை உறுதி செய்துள்ளனர். இதற்கிடையில் சியாமளாவை திருமணம் செய்வதாக ஜெயச்சந்திரன் கூறியுள்ளார். இதையடுத்து, ஜெயச்சத்திரன் செலவுக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் சியாமளாவிடம் கேட்டு வாங்கியுள்ளார். அதன்படி 1.5 லட்சம் மற்றும் வைர நகைளை கொடுத்துள்ளார். இந்நிலையில் திடீரென்று சியாமளாவிடம் பேசுவதை ஜெயச்சந்திரன் தவிர்த்து வந்துள்ளார். அதன்பிறகு ஜெயச்சந்திரனை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த அவர், நடந்த சம்பவம் குறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயச்சந்திரனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Abees , 1.5 lakh diamond jewelery, Abees
× RELATED வியாபாரம் செய்வது போல் நடித்து ரூ.10...