உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் அரசு விழாவில் அமைச்சரிடம் மனு வழங்கிய பெண் மயங்கி விழுந்தார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் அதிமுகவின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கி ஜோதி ஏந்தி அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடைபயணம் நேற்று நடைபெற்றது. அப்போது உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற இருந்தது. இதற்காக பயனாளிகள், புகார் மனு கொடுப்பவர்கள் காலை 8 மணி முதலே காத்திருந்தனர். நலத்திட்ட விழா பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயகுமார் தலைமையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.