பெங்களூரு: பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் கர்நாடகா முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கர்நாடகா காங்கிரஸ் மூத்த தலைவரும், இம்மாநில முன்னாள் அமைச்சருமான டிகே.சிவகுமாரை பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் அமலாக்கத் துறை கடந்த செப்டம்பரில் கைது செய்தது. இவருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 23ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, டெல்லி திகார் சிறையில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், சிவகுமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்தது.
நீதிபதிகள் ரோகிண்டன், எப்.நாரிமன் மற்றும் எஸ்.ரவீந்திரபட் அமர்வில் நேற்று இது விசாரணைக்கு வந்தது.