புதுடெல்லி: இணையதளங்களில் குழந்தைகளின் ஆபாச படங்கள் அதிகளவு இடம் பெறுகிறது. இதை தடுக்கவும், புலனாய்வு செய்யவும் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ, சிறப்பு பிரிவை தனது டெல்லி தலைமையகத்தில் துவக்கி உள்ளது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது: இணையவழி குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோக தடுப்பு-புலனாய்வு அமைப்பு’ என்ற புதிய அமைப்பை சிபிஐ.யின் சிறப்பு குற்றவியல் புலனாய்வு பிரிவு உருவாக்கியுள்ளது. இணையதளங்களில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் பரவுவதை தடுக்க, இந்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.