புதுடெல்லி: நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இது தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிரச்னையை எழுப்பவும் அந்த கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்நிலையில், நாட்டின் பொருளாதாரம் குறித்து ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி, டெல்லியில் நேற்று அளித்த பேட்டி: விமான நிலையங்களும், ரயில் நிலையங்களும் நிரம்பி வழிகின்றன.