வேலூர்: காட்பாடியில் உள்ள மாரியம்மன் கோயிலில் சுமார் ரூ20 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலையை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. வேலூர் மாவட்டம் காட்பாடி வி.டி.கே. நகரில் மாரியம்மன் கோயில் உள்ளது. காட்பாடி ரயில்வே கேட் அருகில் உள்ள இக்கோயிலில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் மர்ம ஆசாமிகள் புகுந்துள்ளனர். அங்கிருந்த சுமார் 30 ஆண்டு பழமை வாய்ந்த 150 கிலோ எடை கொண்ட ஐம்பொன் அம்மன் சிலையை திருடி சென்றுள்ளனர். நேற்று காலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் கருவறையில் மூலவருக்கு பக்கத்தில் இருந்த ஐம்ெபான் சிலை காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.