மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைப்பு

மேட்டூர்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 6,026 கனஅடியாக இருந்தது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 800 கனஅடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. அதேபோல், ஒகேனக்கல்லிலும் நீர்வரத்து சரிந்துள்ளது.

Related Stories: