உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: முத்தரசன் பேட்டி

திருத்துறைப்பூண்டி:  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி:  உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்புகளில் வெளிப்படை தன்மை இல்லை. அதிமுக உள்நோக்கத்துடன் உள்ளாட்சி தேர்தல் மூன்று கட்டங்களாக நடத்தப்படும் என்ற அறிவிப்பு, யாராவது தடையாணை வாங்குவார்கள் அதன்மூலம் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி விடலாம் என்ற எண்ணத்தோடு செயல்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற்றால் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தென்பண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு முறையாக வழக்காடாததே இந்த தீர்ப்புக்கு காரணம். இவ்வாறுஅவர் கூறினார்.

Related Stories: