சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கும் கலெக்டர்களை நியமித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் உத்தரவில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக கிரண் குராலா, தென்காசி மாவட்ட கலெக்டராக ஜி.கே.அருண் சுந்தர் தயாளன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக ஏ.ஜான் லூயிஸ், திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக எம்.பி.சிவனருள், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக எஸ்.திவ்யதர்ஷினி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டது. மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட போது 5 மாவட்டங்களுக்கும் ஐஏஎஸ் அந்தஸ்தில் உள்ள சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் தான் மாவட்டம் பிரிப்பு சம்பந்தமான பணிகளை கவனித்து வந்தனர். தற்போது அவர்களே அந்தந்த மாவட்டங்களுக்கு கலெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.