சென்னை: சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை நடப்பதையொட்டி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. நேற்று (15ம் தேதி) முதல் வருகிற ஜனவரி 20ம் தேதி வரையில், சென்னையிலிருந்து 55 பேருந்துகள், திருச்சியிலிருந்து 2, மதுரையிலிருந்து 2, புதுச்சேரியிலிருந்து 2, தென்காசியிலிருந்து 3 என மொத்தம் 64 அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்பட உள்ளன. பக்தர்களின் வருகைக்கு ஏற்ப, ஒவ்வொரு நாளும் பேருந்துகள் இயக்கப்படும்.