டெல்லி: இந்தியாவில் டீசல் தேவை கடந்த அக்டோபர் மாதத்தில் 3 ஆண்டுகளில் இல்லாத அளவாக சரிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவு இணையதளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது. நாட்டில் டீசல் விற்பனை ஆண்டுக்கான 7.4 விழுக்காடு அளவிற்கு குறைந்து அக்டோபர் மாதத்தில் 65 லட்சத்து 10 ஆயிரம் டன்களாக சரிந்துவிட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து 2017ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டீசல் தேவை சரிந்துவிட்டதாக பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.