×

திருப்பதியில் பக்தர்களுக்கு விற்கப்படும் லட்டு விலை 50 ரூபாயாக உயர்வு: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதியில் பக்தர்களுக்கு விற்கப்படும் லட்டு விலை 50 ரூபாயாக உயர்தப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி லட்டு விலை உயர்வு விரைவில் அமலுக்கு வரும் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 50 ரூபாய்க்கு விற்கப்படும் லட்டுகளை எத்தனை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்றும், திருப்பதியில் சாமி தரிசனம் செய்வோருக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. சலுகை விலையில் லட்டு வழங்குவதால் திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.


Tags : devotees ,announcement ,pilgrims ,Devasthanam ,Tirupati ,price hike ,Tirupati Laddu , Tirupati Laddu, price, hike , Devasthanams
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி