திறமையும், அறிவும் பெற்ற என் மகள் தற்கொலை முடிவு எடுத்திருக்கமாட்டார்: மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி

சென்னை: ஐஐடி மாணவி பாத்திமாவின் மரணம் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று, மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்று தருவோம் என டிஜிபி உறுதி அளித்துள்ளார். என்னுடைய மகள் எந்த சம்பவம் நடந்தாலும், அதை கடிதமாக எழுதி வைப்பார். இந்த சம்பவம் குறித்து அனைத்து விவரங்களையும் தெளிவாக அவர் எழுதி வைத்துள்ளார். இந்த சம்பவத்தை பார்க்கும் போது தற்கொலை இல்லை என தெரிகிறது. திறமையும், அறிவும் பெற்ற என் மகள் தற்கொலை முடிவு எடுத்திருக்கமாட்டார். பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனை பார்த்து என் மகள் அச்சமடைந்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.

Related Stories: