லண்டன்: லண்டனில் நடைபெற்ற நிட்டோ ஏடிபி டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து நட்சத்திர வீரர் ஜோக்கோவிச்சை வீழ்த்தி ரோஜர் பெடரர் அரையிறுதிக்கு முன்னேறினார். லண்டனில் நடைபெற்று வரும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டிக்கு, சுவிட்சர்லாந்து நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் தகுதிபெற்றார். குரூப் பிரிவில் நடைபெற்ற கடைசி போட்டியில் உலகின் 2ஆம் நிலை வீரரான செர்பியாவின் நோவோக் ஜோகோவிச்சை ரோஜர்பெடரர் எதிர்கொண்டார். அனல் பறந்த இந்த போட்டியில் இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் செட் ஆட்டத்தை 6 க்கு 4 என்ற புள்ளிக்கணக்கில் பெடரர் கைப்பற்றினார்.