மத ரீதியான நிகழ்வுகளை தடை செய்ய அரசுக்கு அதிகாரம் இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: மத ரீதியான நிகழ்வுகளை தடை செய்ய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் கிராம அம்மன் கோவில் தேரோட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த கருத்தினை பதிவு செய்துள்ளது. மேலும், ஊர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர் திருவிழாவை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: