சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இளம்பெண்கள் வந்தால் அனுமதிக்க கூடாது: கேரள மார்க்சிஸ்ட் கட்சி

திருவிதாங்கூர்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இளம்பெண்கள் வந்தால் அனுமதிக்க கூடாது என்று கேரள மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்ட மாநில மார்க்சிஸ்ட் பொறுப்பாளர்கள் கூட்டத்திலும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் புதிய தலைவராக என்.வாசு பொறுப்பேற்றுக் கொண்டார். சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதித்து வந்த கேரள அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு பெண்களை அனுமதித்த கேரள அரசு தற்போது நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி தர கூறுகிறது.

Related Stories: