புதுடெல்லி: தமிழகத்தில் பேனர் வைக்க தடைக்கோரி டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்லாமல் தமிழக அரசும் பேனர் வைக்க தடைகோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழகத்தில் பேனர் வைக்க தடைகோரி ட்ராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கோவையில் ரகு என்பவரும், சென்னையில் சுபஸ்ரீ என்ற பெண்ணும் பேனர் விழுந்து உயிரிழந்துள்ளனர். மேலும் ஏராளமான சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றது. இது தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் அளவிற்கு பெரும் பிரச்சனையாக உருமாறி வருகிறது. எனவே, உச்சநீதிமன்றம் தலையிட்டு உடனடியாக தமிழகம் முழுவதும் பேனர் வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ட்ராபிக் ராமசாமி சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும், மற்றொரு முக்கிய காரணமாக, சுபஸ்ரீ உயிரிழந்த சிறு இடைவேளைக்குள்ளாகவே சீன அதிபர் ஜின் பிங் தமிழகம் வந்தபோது தமிழக அரசு பேனர் வைக்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.