வாரணாசி: வாரணாசி உள்ளிட்ட 3 இடங்களில் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளின் சோதனையில் ரூ.20.4 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குவாஹாத்தி, சிலிகுரி, வாரணாசி நகரங்களில் வருவாய் புலனாய்வு அதிகாரிகளின் சோதனையில் 51.66 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியுள்ளது. ரூ.20.4 கோடி மதிப்புள்ள 51.66 கிலோ தங்கத்தை கடத்தியதாக 6 பேரை கைது செய்துள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.