×

பேனர் வைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்த மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்

டெல்லி: சீன அதிபர் சென்னை வந்தபோது அவரை வரவேற்று பேனர் வைக்க தமிழக அரசுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பேனர் வைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி மனுத்தாக்கல் செய்திருந்தார். சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்ததை அடுத்து பேனர்களுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. பேனர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து டிராபிக் ராமசாமி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Tags : Banner, Supreme Court
× RELATED முல்லைப் பெரியாறு அணை வழக்கு...