இஸ்லாமாபாத்: காஷ்மீர் இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்ததாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் கூறியுள்ள பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவில் முஷாரப் கூறுவதாவது: காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்கு வருவோருக்கு இங்கு ஹீரோக்கள் போன்று வரவேற்பு அளிக்கப்படும். நாங்கள் அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளிப்போம். அவர்களை இந்திய ராணுவத்துக்கு எதிராக போரிடும் புனித போராளிகளாக கருதுவோம். இந்த காலக்கட்டத்தில் தான் லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புக்கள் தோன்றி” என்று கூறியுள்ளார்.