புதுடெல்லி: சந்திரயான்-3 விண்கலத்தை அடுத்தாண்டு நவம்பருக்குள் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிலவுக்கு இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் முழு வெற்றி பெறவில்லை. இந்நிலையில், அடுத்தாண்டு நவம்பரில் சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பல குழுக்களை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இவற்றில் 3 துணைக் குழுக்கள் கடந்த அக்டோபரில் இருந்து 4 உயர்நிலை கூட்டம் நடத்தியுள்ளது.