சென்னை: சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் கேலிகளும், பிரிவினைகளின் பிரதிபலிப்பும் எல்லா இடங்களிலும் இருக்கிறது. அங்கு நடக்கும் தற்கொலைக்கும், இதற்கும் சம்பந்தப்படுத்தக்கூடாது. நாடு முழுவதும் நடக்கும் ஒரு அவலம். அதன் பிரிதிபலிப்பாக இது இருக்கக்கூடும்.
பட வாய்ப்புகள் குறைந்து கொண்டு வருவதால் நடிகர்கள், அரசியலுக்கு வருவதாக முதலமைச்சர் தெரிவிக்கிறார். அவர் இதையே தொடர்ந்து கூறிக்கொண்டு இருப்பதால் அது உண்மையாக வேண்டிய அவசியம் இல்லை.