×

மாநிலதேர்தல் ஆணையத்திற்கு புதிய செயலாளர் நியமனம் உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் பணி செய்தவரை மாற்றியது ஏன்?: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் பணியை செய்து கொண்டிருந்த மாநில தேர்தல் ஆணைய செயலாளரை மாற்றியது ஏன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவரும் எதிர் கட்சி தலைவருமாகிய மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு: உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர்  பழனிச்சாமியை திடீரென்று மாற்றியிருப்பது கண்டனத்திற்குரியது. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தல் பணிகளைச் செய்து கொண்டிருந்தவரை மாற்றியது ஏன்?விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விசுவாசமாக பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர், மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா. இது, உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடவா அல்லது உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினரை ஒட்டுமொத்தமாக தில்லுமுல்லுகளில் ஈடுபடுத்தவா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : MK Stalin ,election ,Supreme Court ,State Election Commission ,DMK , new Secretary,State, Election Commission,DMK ,MK Stalin
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...