மதுரை: சுட்டுக்கொல்லப்பட்ட மணிவாசகத்தின் இறுதி சடங்கில் பங்கேற்க சிறையில் உள்ள அவரது மனைவி, தங்கைக்கு 3 நாள் பரோல் வழங்கப்பட்டது.நாமக்கல் மாவட்டம், கல்லக்காட்டுவலசு அருகே குமாரபாளையத்தை சேர்ந்த அன்பரசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கேரளாவில் கடந்த மாதம் 29ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்ட மணிவாசகம் இறுதி சடங்கில் பங்கேற்க சிறையில் உள்ள அவரது சகோதரி சந்திரா, மனைவி கலா ஆகியோருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.