வேலூர்: வேலூரில் இருந்து ஆற்காடு சென்ற அரசு பஸ்சின் ராடு கட்டாகி நடுவழியில் பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் வேலூர் மண்டலத்தின் கீழ் 700 பஸ்கள், நகர, புறநகர் மற்றும் தொலைதூர பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இதில் 70 சதவீதம் ஆயுட்காலம் முடிந்தும் இயக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான அரசு பஸ்கள் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நின்று விடுகின்றன. இந்நிலையில், வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஆற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது.