நெல்லை: நெல்லை அருகே அரசு பஸ் கண்ணாடி திடீரென்று உடைந்ததால் பஸ்சில் பயணம் செய்த மாணவர்கள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அது தானாக உடைந்ததா அல்லது விஷமிகள் கல்வீசினார்களா? என விசாரணை நடக்கிறது.
நெல்லை மானூர் அருகே நல்லம்மாள்புரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அதன் அருகில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. இங்கு சுற்றுப்பட்டியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்கள் வசதிக்காக நெல்லை டவுனில் இருந்து பள்ளமடைக்கு அரசு பஸ் விடப்பட்டுள்ளது.. இந்த பஸ் காலை, மாலை வந்து செல்லும். இதுபோல் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் அரசு பஸ் நெல்லையிலிருந்து புறப்பட்டு நல்லம்மாள்புரம் வந்தது. அப்போது மாணவர்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏறிக்கொண்டிருந்தனர்.