பந்தலூர்: பந்தலூர் அருகே அரசு பழங்குடியினர் நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினத்தையொட்டி ஆசிரியர்கள் மாணவர்களாகவும், மாணவர்கள் ஆசிரியர்களாகவும் நேற்று ஒருநாள் பள்ளியை நிர்வாகம் செய்தனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த முக்கட்டி அரசு பழங்குடியினர் நடுநிலைப்பள்ளியில் 100 மாணவர்கள் பயின்று வருகின்றனர். குழந்தைகள் தினத்தையொட்டி நேற்று ஒரு நாள் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களாகவும், ஆசிரியர்கள் மாணவர்களாகவும் செயல்பட்டனர்.
இதில் 8ம் வகுப்பு மாணவி தர்ஷினி ஒருநாள் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். காலை இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து, தினமும் திருக்குறள், பழமொழி உள்ளிட்டவைகளை ஆசிரியர்கள் சமர்ப்பித்தனர். தொடர்ந்து தலைமை ஆசிரியராக செயல்பட்ட தர்ஷினி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார்.