திருவனந்தபுரம் : சபரிமலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பற்றி உச்சநீதிமன்றம் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என்றும் உச்சநீதிமன்றம் என்ன உத்தரவிடுகிறதோ அதை அமல்படுத்துவது அரசின் கடமை என்றும் தெரிவித்தார்.