கள்ளக்குறிச்சி : பணி ஆணை வழங்க லஞ்சம் பெற்ற புகாரில் கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் தயாளன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 5 கிராம நிர்வாக உதவியாளர் இடங்களுக்கு பணி ஆணை வழங்க ரூ. 30 லட்சம் லஞ்சம் பெற்று முறைகேடு செய்ததாக புகார் கூறப்படுகிறது. முறைகேட்டுக்கு துணையாக இருந்ததாக துணை வட்டாட்சியர் பாண்டி, ஏ3 அலுவலர் தசரதன் இருவருக்கும் மெமோ அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.