சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து
சென்னை உயர் நீதிமன்ற நடுவர் மையம் உத்தரவிட்டுள்ளது. ரூ.10 கோடி கடனை திருப்பி தராததால் தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஹீரோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் 10 கோடி ரூபாய் கடன் பாக்கி என புகார் கூறப்படுகிறது. ஹீரோ படத்தை வேறு தலைப்பில் வெளியிடவும், வேறு நிறுவனங்களின் பெயரில் வெளியிடவும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.