ரஃபேல் விவகாரத்தில் காங். கட்சியும், ராகுல் காந்தியும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்:: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

டெல்லி : ரஃபேல் தீர்ப்பு உண்மைக்கும், நேர்மையாக முடிவெடுக்கும் மோடி அரசுக்கும் கிடைத்த மற்றுமொரு வெற்றி என்று அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். முன்னதாக ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சிறப்பு விசாரணை கோரிய சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், ஒப்பந்தத்தில் முறைகேடுகள்  நடந்திருப்பதாகக் கூறுவதற்கு முகாந்திரம் இல்லை என மீண்டும் உறுதிப்படுத்தியது.

Related Stories: