சென்னை: கழிவுகளை அகற்றும் பணியின் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தோரில் தமிழகம் முதலிடம் என்பது அனைவருக்கும் தலைகுனிவு, இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க நவீன கருவிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் டிவிட்டரில், கழிவுகளை அகற்றும் பணியின் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் 1993 முதல் இன்று வரை 206 பேர். இதில் தமிழகம் முதலிடம் என்பது அனைவருக்கும் தலைகுனிவு.