காபூல்: ஆப்கானிஸ்தானில் தனியார் நிறுவன காரின் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் நேற்று காலை வழக்கம்போல் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது. அப்போது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட மினி வேன் ஒன்றின் மூலம், அந்த பகுதியில் சென்ற தனியார் கனடா பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமான கார் லாரி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், இரண்டு வாகனங்களும் வெடித்து சிதறின. இந்த தாக்குதலில் 4 வெளிநாட்டினர் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.