வயதான தம்பதியை அடித்து கொலை மிரட்டல்: அதிமுக பிரமுகர் மகன் மீது போலீசில் புகார்

பல்லாவரம்: ரூ.10 ஆயிரம் பணம் வாங்க வந்த வயதான தம்பதியை அடித்து கொலை மிரட்டல் விடுத்த அதிமுக பிரமுகர் மகன் மீது பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்லாவரம் ரங்கநாத முதலி தெருவை சேர்ந்தவர் அமுதவல்லி சிங்காரம். இவர் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.அந்த புகாரில் கூறியிருப்பதாவது: எனது கணவர் சிங்காரம், தனது தம்பி இளங்கோவன் கடையில் இருக்கும் சாமியார் ஒருவர் ₹10 ஆயிரம் பணம் தர வேண்டும். இந்த பணத்தை வாங்க எனது கணவர் சென்றபோது, எனது கணவரின் தம்பி இளங்கோவன் தகாத வார்த்தைகளில் பேசினார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சிங்காரம் தனது சகோதரனை அடித்தார். உடனே இளங்கோவன் அவரது மகன் அஜித்குமாரை வரழைத்து என் கணவரை எட்டி உதைத்து கீழே தள்ளினார். அதை தடுக்க முயன்ற என்னையும் கீழே தள்ளினார். இதை பார்த்த எனது மகள் தடுக்க முயன்றபோது அவருடையே புடவையை இழுத்து தள்ளி தாக்கினார். எனவே, வயதான என்னையும், எனது கணவரையும் அடித்து உதைத்த அஜித்குமார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார்.புகாரின் படி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: