சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உலகத் தரத்திற்கேற்ப சாலை அமைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதன்மூலம் மக்கள் எளிதாக பாண்டிபஜார் பகுதியில் பயணம் செய்ய முடியும். போதிய நிதி ஆதாரத்தை திரட்டி அனைத்து சாலைகளும் படிப்படியாக சீரமைக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி பணிகளில் தமிழகம் 8வது இடத்தில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.