சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர் நவம்பர் 19ம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பாரிமுனையில் என்.எஸ்.சி. போஸ் சாலையில் நடைபாதையில் வியாபாரம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது ஏன் என்று நேரில் விளக்கம் அளிக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.