சென்னை: கழிவுகளை அகற்றும்போது விஷவாயு தாக்கி இதுவரை 206 பேர் உயிரிழந்துள்ளனர், இதில் தமிழகம் முதலிடம் என்பது தலைகுனிவு என்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதில் திமுக ஆட்சி காலமும் உண்டு, அரசு மட்டுமல்ல அனைவரும் சேர்ந்து இச்சமூக அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் அவர் தெரிவித்தார்.